பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு திட்டம் - தமிழகத்திற்கு விருது

பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகத்திற்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.
பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு திட்டம் - தமிழகத்திற்கு விருது
x
பிரசவ காலத்தில் தாய்மார்களின் உயிரிழப்பை குறைக்கும் வகையில், செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு திட்டம் மூலம் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான விருதை தமிழகம் வென்றுள்ளது. டெல்லியில்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழகம் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விருதினை பெற்றுக் கொண்டார். விழாவில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம், எய்ம்ஸ் மருத்துவமனை பணியை விரைந்து ​முடிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்தார். 




Next Story

மேலும் செய்திகள்