கடனை திரும்ப செலுத்துகிறேன் - விஜய் மல்லையா

வங்கிகளிடம் பெற்ற கடன்களை திரும்ப செலுத்த விஜய் மல்லையா ஒப்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடனை திரும்ப செலுத்துகிறேன் - விஜய் மல்லையா
x
வங்கிகளுக்கு 13  ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்து விட்டு, அதை   திரும்ப செலுத்தாமல் கிங் பிஷர் நிறுவன தலைவர் விஜய் மல்லையா லண்டனில் தஞ்சமடைந்தார்.  விஜய் மல்லையாவிற்கு கொடுக்கப்பட்ட கடனை திரும்ப பெற இந்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், வங்கிகளிடம் பெற்ற கடனை திரும்ப செலுத்துவதாக விஜய் மல்லையா ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், ஆயிரத்து 280 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இந்திய நீதிமன்றங்கள் மூலம் முடக்கப்பட்டுள்ளது. அந்த தடையை விடுவித்தால், அதை கொண்டு, கிங் பிஷர் நிறுவன ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியையும் தந்து விடுவதாகவும் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். கடனை திரும்ப செலுத்துவது குறித்து 2016ம் ஆண்டே கடிதம் எழுதியதாக தெரிவித்துள்ள விஜய் மல்லையா, வங்கிகள் கூட்டமைப்பு தன் மீது போலியான குற்றச்சாட்டுகளை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்