ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் பங்கேற்ற பிறகு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது

ஆர்.எஸ்.எஸ்-ல் சேர விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 4 மடங்கு உயர்வு
ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் பங்கேற்ற பிறகு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது
x
ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசுத் தலைவர்  பிரணாப் முகர்ஜி கலந்து கொண்ட பிறகு, அந்த அமைப்பில் சேருவதற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த தலைவர் விப்லப் ராய் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்ட பிறகு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைய பலரும் ஆர்வம் காட்டி வருவதாகக் தெரிவித்தார். 

ஆர்.எஸ்.எஸ்.,-ல் இணைவதற்கு, இதற்கு முன்பு, தினமும் சராசரியாக 350 விண்ணங்கள் வந்ததாகவும், பிரணாப் முகர்ஜி பங்கேற்ற பிறக, தினமும் ஆயிரத்து 300 விண்ணப்பங்கள் வரை வருவதாகவும் அவர் கூறினார். இதில் பெரும்பாலான விண்ணப்பங்கள், பிரணாப்பின் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்திலிருந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆர்.எஸ்.எஸ்., மீதான நம்பிக்கை அதிகரித்திருப்பதே இந்த மாற்றத்துக்கு காரணம் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்