ஆபத்தானதா இ- சிகரெட் ? மருத்துவர்கள் சொல்வது என்ன ?

தமிழகத்தில் இ-சிகரெட்டுக்கு தடை விதிக்க முடிவு ஒரு மாதத்தில் தடை - ஆபத்தானதா இ- சிகரெட் ? மருத்துவர்கள் சொல்வது என்ன ?
ஆபத்தானதா இ- சிகரெட் ? மருத்துவர்கள் சொல்வது என்ன ?
x
சாதாரண சிகரெட்டின் தோற்றத்தில் நீளமான குழாய். அதற்குள் திரவம் அடங்கிய கேட்ரிட்ஜ் ஒன்று இருக்கும். இந்த கேட்ரிட்ஜை தேவைப்படும்போது வெளியே எடுத்து, அதில் திரவத்தை நிரப்பிக் கொள்ளலாம். உள்ளே போட்டதும் ஆன் செய்வதற்கான பட்டன் ஒன்று இருக்கும். அதை அழுத்தினால் போதும். இ-சிகரெட் கருவிக்குள் இருக்கிற மின் சாதனங்கள் அந்தத் திரவத்தை ஆவியாக்கிவிடும். அதை வாயில் வைத்து உறிஞ்சினால், கேட்ரிட்ஜிலிருந்து நீராவி வெளிவரும்.

500 க்கும் அதிகமான விதவிதமான ஃபிளேவர்களில், குறைந்தபட்சம் 300 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாய் வரை இது விற்கப்படுகிறது. பேனா, யுஎஸ்பி டிரைவ் போன்ற டிசைன்களிலும்கூட இ-சிகரெட்டுகள் கிடைக்கின்றன. வந்த புதிதில் உலகெங்கும் அமோக வரவேற்பைப் பெற்ற இ சிகரெட்டுகள், நாளடைவில் இதன் பாதிப்புகள் தெரியவந்ததால், உலகின் பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. கர்நாடகா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் இதற்குத் தடை இருக்கிறது. மலட்டுத்தன்மை, மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய் ஏற்படும் என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதால், தமிழகத்தில் இ-சிகரெட்டுக்குத் தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இ- சிகரெட்டுகளுக்கான தடையும், பெயர் அளவிற்கு மட்டுமே இல்லாமல் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அதற்கு தடை விதிக்கப்படுவதில் உண்மையான அர்த்தம் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Next Story

மேலும் செய்திகள்