ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பெற்ற பெண்

தாய்-சேய்கள் நலமுடன் இருப்பதாக தகவல்
ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பெற்ற பெண்
x
கோத்தகிரியை சேர்ந்த விவேக்-வித்யா தம்பதியினருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் கடந்தும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்துள்ளனர். அவர்கள் துடியலூர் தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சையின் பலனாக வித்யா கர்ப்பமாகியுள்ளார். 

3 மாதம் ஆன நிலையில் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது 3 கருக்கள் உருவாகியது தெரியவந்துள்ளது. கடந்த 15ஆம் தேதி வித்யாவிற்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர்.சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு இல்லாததால் அறுவை சிகிச்சை முறையில் 3 ஆண் குழந்தைகளை வெளியே எடுத்தனர். பிறந்த 3 குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

 



Next Story

மேலும் செய்திகள்