திருப்பதி கோயிலில் சுரங்கம் தோண்டியதாக புகார்: உண்மைக்கு புறம்பானது என செயல் அலுவலர் விளக்கம்

திருப்பதி கோயிலில் புதையல் எடுக்க சுரங்கம் தோண்டப்பட்டதாக கூறுவது உண்மைக்கு புறம்பான தகவல் என, இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜூ தெரிவித்தார்.
திருப்பதி கோயிலில் சுரங்கம் தோண்டியதாக புகார்: உண்மைக்கு புறம்பானது என செயல் அலுவலர் விளக்கம்
x
திருப்பதி கோயிலில் பிரசாதம் தயார் செய்யும் மடப்பள்ளியில் புதையல் எடுக்க சுரங்கம் தோண்டப்பட்டதாகவும், நகைகள் காணாமல் போனதாகவும் கோயிலின் முன்னாள் தலைமை அர்ச்சகரும், ஆலோசகருமான ரமண தீட்ஷிதலு சமீபத்தில் குற்றம்சாட்டி இருந்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கோயில் இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜூ, ரமண தீட்ஷிதலு உண்மைக்குப் புறம்பான தகவல்களை கூறி வருவதாக தெரிவித்தார். தன் மீதான குற்றச்சட்டுக்கு எந்த விசாரணைக்கும் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்