புதுச்சேரியில் அரசுப் பேருந்து கட்டண உயர்வு

புதுச்சேரியில் அரசுப் பேருந்து கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது
புதுச்சேரியில் அரசுப் பேருந்து கட்டண உயர்வு
x
புதுச்சேரியில் அரசுப் பேருந்து கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு செய்தபோது, எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் பேருந்து கட்டண உயர்வுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்திருந்தார். புதுச்சேரி அரசு சார்பில் இயக்கப்பட்டு வரும் நகர்புறம் மற்றும் புறநகர் பேருந்துக்கான கட்டணங்களை உயர்த்தி சாலை போக்குவரத்து கழகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயில் இருந்து  7 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணமாக 10 ரூபாயில் இருந்து 14 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த பேருந்து கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்