ரயில் விபத்தை சாமர்த்தியமாக தவிர்த்த 9 வயது சிறுமி

திரிபுரா மாநிலத்தில் ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய 9 வயது சிறுமிக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன
ரயில் விபத்தை சாமர்த்தியமாக தவிர்த்த 9 வயது சிறுமி
x
திரிபுரா மாநிலம் தன்சேரா பகுதியில் வசித்து வரும் சுமதி என்ற சிறுமி அந்த பகுதியில் மூங்கில் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். கன மழை காரணமாக அந்த பகுதியில் பெரும்பாலான இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் ரயில் ஒன்று அந்த வழியாக வருவதை பார்த்த சிறுமி, தன் உடையை காட்டி ரயிலை நிறுத்த முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த ரயில் ஓட்டுநர், உடனே ரயிலை நிறுத்தியதால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயிலில் பயணம் செய்த 2 ஆயிரம் பயணிகளின் உயிரை காப்பாற்றியதற்காக சிறுமிக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் சாதுர்யமாக செயல்பட்டு விபத்தை தடுத்த சிறுமியை ஊக்குவிக்கும் வகையில் அவரது தந்தைக்கு ரயில்வே துறையில் வேலை வழங்க திரிபுரா மாநில அரசு முடிவு செய்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்