புதுச்சேரி தனிபடை போலீசார் மீது தாக்குதல்

மோசடி வழக்கில், தொழிலதிபரை கைது செய்ய கேரளா சென்ற புதுச்சேரி தனிபடை போலீசார் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி தனிபடை போலீசார் மீது தாக்குதல்
x
கேரளா மாநிலம் வண்டிபேட்டை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் பிஜூ என்பவர் புதுச்சேரியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் 38 லட்சம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்த வழக்கில் பிஜூவை பிடிக்க காவல் உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் 6 பேர் அடங்கிய தனிபடை போலீசார் கேரளா சென்றனர். அப்போது வண்டிபேட்டை பகுதியில் சென்று கொண்டு இருந்த பிஜூவை தனிப்படை போலீசார் கைது  செய்தனர். இதனை அறிந்த பிஜூவின் ஆதரவாளர்களும் , பொதுமக்களில் சிலரும்  வாகனத்தை அடித்து நொறுக்கி போலீசாரை தாக்கிவிட்டு அவரை அழைத்து சென்றனர். இதில் காயமடைந்த போலீசாருக்கு மருத்துவமணையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.  தகவல் அறிந்த புதுச்சேரி டிஜிபி கவுதம், கேரளா மாநில காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி குற்றவாளியை பிடிக்க உதவி கேட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்