"பொதுத்துறை வங்கிகளில் பணம் 100% பாதுகாப்பாக உள்ளது" - மத்திய நிதி அமைச்சர் பியுஷ் கோயல்

பொதுத்துறை வங்கிகளில் மக்கள் வைத்துள்ள பணம் அனைத்தும் மிக பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகளில் பணம் 100% பாதுகாப்பாக உள்ளது - மத்திய நிதி அமைச்சர் பியுஷ் கோயல்
x
பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடி தொடங்கி, பல்வேறு வங்கி மோசடிகள், மக்கள் மத்தியில் பொதுத்துறை வங்கிகள் மீதான பார்வையை மாற்றியுள்ளது. இந்நிலையில் இது குறித்து, வங்கி தலைவர்களுடம், டெல்லியில் பேச்சு வார்த்தை நடத்திய மத்திய நிதி அமைச்சர் பியுஷ் கோயல்,  டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வங்கிகளை சீரமைக்க, இந்திய ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் தர மத்திய அரசு தயங்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் தனியார் வங்கிகளில் பணத்தின் பாதுகாப்பு குறித்து உறுதி சொல்ல முடியவில்லை என்றும் தெரிவித்துள்ள பியுஷ் கோயல், பொதுத்துறை வங்கிகளில் உள்ள பணம் நூறு சதவிதம் பாதுகாப்பாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்