காவிரி விவகாரத்தில் இனி ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்

" ஆணையத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, ஆணையம் தான் இனிமேல் முடிவெடுக்க வேண்டும் " - பொன்.ராதாகிருஷ்ணன்
காவிரி விவகாரத்தில் இனி ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
x
டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை, பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தார். தமிழக விவசாய சங்க பிரதிநிதிகளும் இடம்பெற்றிருந்த இந்த சந்திப்பின் போது, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், காவிரி ஆணையத்திற்கு பிரதிநிதிகளை கொடுப்பது கர்நாடக அரசின் கடமை என்றார்.

Next Story

மேலும் செய்திகள்