இந்தியா-சீனா உறவை மேம்படுத்த சாதகமான சூழல் - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தியா, சீன உறவை மேம்படுத்த, சாதகமான சூழல் நிலவி வருகிறது என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியா-சீனா உறவை மேம்படுத்த சாதகமான சூழல் - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
x
சென்னை மயிலாப்பூரில், சீனாவின் புவி அரசியல், வர்த்தகம், சமுதாய மாற்றம் குறித்த சர்வதேச கருத்தரங்கை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்,  கடந்த 4 ஆண்டுகளில் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். இந்தியா- சீனா  இடையே மூன்று லட்சம் கோடி ரூபாய் அளவில் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பத்திற்காக செலவிடப்படுவதாக குறிப்பிட்ட அவர்,  இரு நாட்டு உறவுகள் மேம்பட இந்திய பிரதமர் மோடி தான் காரணம் என பாராட்டினார். மேலும் உறவை வலுப்படுத்த, இரு நாட்டு தலைவர்களின் அதிகாரப்பூர்வ ஹாட்லைனில் வசதி தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்