இலங்கையில் விடுதலையான 15 தமிழக மீனவர்கள் - சென்னை ஏர்போர்ட்டில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு

x

இலங்கையில் விடுதலையான 15 தமிழக மீனவர்கள் - சென்னை ஏர்போர்ட்டில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு

இலங்கை சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை வந்தடைந்த 15 தமிழக மீனவர்களை பாஜகவினர் வரவேற்றனர்... 64 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், முருகன் என்ற மீனவருக்கு மட்டும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு 63 தமிழக மீனவர்களை கடந்த 9ந் தேதி இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த 21ம் தேதி 15 மீனவர்கள் சென்னை வந்தடைந்த நிலையில், 2வது கட்டமாக கொழும்பில் இருந்து 15 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்... அவர்களை பாஜகவினர் வரவேற்றனர்... தொடர்ந்து தமிழக மீன்வளத்துறை மூலம் மீனவர்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர்... மீதமுள்ள 33 மீனவர்கள் விரைவில் சென்னை திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்