"திருடன், வேலை தெரியாதவர்... வேண்டாம் ஞானவேல்.." - - பொன்வண்ணன் எச்சரிக்கை

x

பருத்திவீரன் பட சர்ச்சை விவகாரத்தில் தரம் தாழ்ந்த மனநிலை வேண்டாம் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை நடிகர் பொன்வண்ணன் சாடியுள்ளார்.

பருத்திவீரன் படம் சார்ந்து அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் முன்வைத்தது திரையுலகில் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த சூழலில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பொன்வண்ணன் ஞானவேல்ராஜாவை கடுமையாக சாடியுள்ளார். படத்தை தயாரிப்பாளர் கைவிட்ட போதும், எந்த சமரசமும் இல்லாமல், நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கி படத்தை அமீர் உருவாக்கியதாகவும், ஆனால் அவரை திருடன், வேலை தெரியாதவர் என ஞானவேல்ராஜா கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல எனவும் சாடியுள்ளார். இருட்டறையில் முரட்டுக்குத்து படத்தை அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும், அமீரையும் எடைபோட்டுவீட்டீர்களா எனவும் பொன்வண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்