"விசித்ராவுக்கு நடந்ததை போல எனக்கும் நடந்தது.. அந்த பெரிய ஹீரோ" - சல்லி சல்லியாக நொறுக்கிய நடிகை

x

விசித்ராவுக்கு நடந்ததைபோல, தானும் பாலியல் தொல்லையை எதிர்கொண்டதாக, 'காதல்' பட நடிகை சரண்யா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்...

இது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த அவர், பாலியல் பிரச்சினைகளை பல ஆண்டுகள் கழித்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன? என பலர் விமர்சிப்பதாகவும், ஆனால், பெரிய நடிகையாக இல்லாதபோது, ஒரு நடிகை சொல்லும் எதுவும் இங்கே எடுபடாது எனவும் ஆதங்கம் தெரிவித்தார். சினிமாவில் ஆண் ஆதிக்கம் நிறைந்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவர், பெண்கள் பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர் பெரிய ஹீரோ என்பதால் என்னவென்று கூட கேட்கமாட்டார்கள் என வேதனை தெரிவித்துள்ளார். இதேபோல பல பிரச்சினைகளை சந்தித்துள்ளதாகவும், நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே நமது குரல் கேட்கும் எனவும் குறிப்பிட்டு, சினிமாவில் சொல்லப்படாத ஆயிரம் கதைகள் இருப்பதாக பரபரப்பை கிளப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்