15 years of Paruthiveeran "எல்லா புகழும் இயக்குநர் அமீர்-க்கே"நடிகர் கார்த்தி உருக்கமான டுவிட்

பருத்திவீரன் படத்தின் மூலம் நடிப்பு வாழ்க்கையை தொடங்கியதை பாக்கியமாக கருதுவதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
x
பருத்திவீரன் படத்தின் மூலம் நடிப்பு வாழ்க்கையை தொடங்கியதை பாக்கியமாக கருதுவதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். பருத்திவீரன் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில், படத்தில் என்னுடைய ஒவ்வொரு அசைவையும் இயக்குநர் அமீர், வடிவமைத்து பயிற்சி அளித்தார் என்றும், எல்லா புகழும் அவருக்கே சேரும் என்றும் தெரிவித்துள்ளார். எனக்குக் கற்றுக் கொடுத்த விதத்தை நான் இன்னும் பொக்கிஷமாகக் கருதுவதாகவும், இந்த அழகான பாதையில் என்னை அழைத்துச் சென்ற இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல், அன்பான ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு மனமார்ந்த நன்றி என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்