ஆபாச பட தயாரிப்பு விவகாரம்: நடிகை கெஹானா வசிஸ்த்தை கைது செய்த போலீஸ்

ஆபாச பட தயாரிப்பு விவகாரத்தில் கைதான நடிகை கெஹானா வசிஸ்த்துக்கு ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளார்.
ஆபாச பட தயாரிப்பு விவகாரம்: நடிகை கெஹானா வசிஸ்த்தை கைது செய்த போலீஸ்
x
ஆபாச படங்களை தயாரித்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இணையத்தில் பதிவேற்றுவதற்காக ஆபாச படங்களை இயக்கியதாக நடிகை கெஹானா வசிஸ்த்தை மும்பை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். படப்பிடிப்பின் போதே கெஹானா கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே ஜாமின் கோரி அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தை நாட அவர் முடிவு செய்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்