'மாரி 2' வில்லன் நடிகர் மருத்துவமனையில் அனுமதி - சண்டை காட்சி படப்பிடிப்பின் போது காயம்

மலையாள நடிகர் டொவினோ தாமஸ், சண்டை காட்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாரி 2 வில்லன் நடிகர் மருத்துவமனையில் அனுமதி - சண்டை காட்சி படப்பிடிப்பின் போது காயம்
x
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் டொவினோ தாமஸ். 'மாரி 2' படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்ததன் மூலமாக தமிழிலும் அறிமுகமானார். தற்போது 'கலா' என்ற மலையாள படத்தில் நடித்து வந்தார். மேன் வெர்ஸஸ் வைல்டு பாணியில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது. கலா படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வந்தது. இதில் சண்டை காட்சியில் நடித்த போது டொவினோ தாமஸுக்கு வயிற்றில் அடிபட்டது. தொடர்ந்து 3 நாட்களாக வலி இருந்துகொண்டே இருந்ததையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் , உள் காயம் ஏற்பட்டு ரத்தப்போக்கு இருப்பதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு கடந்த ஆண்டும் 'எடக்காடு பெட்டாலியன் 06' என்ற படத்தில் டூப் போடாமல் சண்டை காட்சியில் நடித்தப்போது தீவிபத்துக்குள்ளானார் டொவினோ. அந்த காட்சி இணையத்தில் வெளியானது. தொடர்ந்து இதுபோல் சண்டை காட்சிகளில் டூப் போடாமல், உயிரை பணயம் வைத்து நடித்து வரும் டொவினோ தாமஸை பாராட்டும் அதே நேரத்தில் , அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என சினிமா நட்சத்திரங்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்