"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்
தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் சங்க பிரச்சினை என்பது ஒரு குடும்பத்திற்குள் ஏற்படும் தகராறு போலதான் என்றார். ஆனால் தற்போது நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்ற சண்டை தான் நடிகர் சங்கத்திற்குள் நடப்பதாக கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்தார். நடிகர் சங்க வழக்குகள் நீதிமன்றத்திற்கே செல்லக் கூடாது என்றும் அவர் கூறினார்.
Next Story