பெண்களுக்கு தற்காப்பு கலை அவசியம் - நடிகை அமலாபால்

பெண்கள் தற்காப்புக் கலையை கற்க வேண்டும் என்று நடிகை அமலா பால் தெரிவித்தார்.
x
தற்காப்புக் கலை தெரிந்ததால் தன்னால், தனியாக பயணம் செய்ய முடிவதாக நடிகை அமலா பால் கூறினார். அவர் நடித்துள்ள ' அதோ அந்த பறவை போல ' படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய அமலா பால்,  ஒரு பெண் காட்டுக்குள் மாட்டிக் கொள்வதும், அதிலிருந்து  தப்பி வருவதும்தான் படத்தின் கதை என்று கூறினார்.  தற்காப்புக் கலை தெரிந்ததால், சிக்கல் ஏற்பட்டாலும் தப்பித்து விடலாம் என்கிற தைரியம் உள்ளதாகவும்,  பெண்கள் தற்காப்புக் கலையை கற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.  


Next Story

மேலும் செய்திகள்