இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ இட விவகாரம்: "இரு தரப்புக்கும் பாதகம் இல்லாமல் தீர்வு" - இயக்குனர் பாரதிராஜா நம்பிக்கை

இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ இடையேயான பிரச்சினையில் இருதரப்புக்கும் பாதகம் இல்லாமல் தீர்வு காணப்படும் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
x
சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள இசை கூடத்தில்  சுமார் 45 ஆண்டுகளாக இளையராஜா தனது இசை பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த இடம்  தொடர்பாக இருதரப்புக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளது. இந்நிலையில் பிராசத் ஸ்டியோ நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சீமான், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் அங்கு சென்றனர். ஆனால் உள்ளே செல்ல விடாமல்அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்