'கைதி'க்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி- கார்த்தி
'கைதி' படத்துக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு தமது நன்றி போதுமானதாக இருக்கும் என தாம் நினைக்கவில்லை என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்
'கைதி' படத்துக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு தமது நன்றி போதுமானதாக இருக்கும் என தாம் நினைக்கவில்லை என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் கைதி படக்குழு இதயத்தில் இருந்து கதையை வடிவமைத்து, தயாரித்ததாக கூறியுள்ளார். அதேநேரம் இவ்வளவு பெரிய வெற்றியை தருவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை என நன்றி தெரிவித்துள்ள நடிகர் கார்த்தி தமது இதயப்பூர்வமான நன்றி உரித்தாக்குவதாக கூறியுள்ளார். வெற்றியை தந்த அனைவரையும் நேசிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story