சிறந்த படத்திற்கான விருதை பெற்ற 'பரியேறும் பெருமாள்'

பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை என நினைத்து வருந்திய அனைவருக்கும், படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
சிறந்த படத்திற்கான விருதை பெற்ற பரியேறும் பெருமாள்
x
பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை என நினைத்து வருந்திய அனைவருக்கும், படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற திரைப்பட விழாவில், பரியேறும் பெருமாள் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. இந்த விருதை பெற்றுக் கொண்டு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மாரிசெல்வராஜ்,  மதத்தையும், சாதியையும் திணித்தால் தூக்கி எறியக்கூடிய இளைய தலைமுறை உருவாகி உள்ளதாக கூறினார். தமது படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்று வருந்திய அனைவருக்கும் இந்த விருதை சமர்பிப்பதாகவும் மாரி செல்வராஜ் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்