கலைமாமணி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சி - ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம்

தனது 90ஆவது வயதில் கலைமாமணி விருதுக்கு தான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
x
பல ஆண்டுகளாக பல்வேறு திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றி வரும் ஜூடோ ரத்தினத்துக்கு, தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை பூர்விகமாக கொண்ட ஜூடோ ரத்தினம் தனது 90 ஆவது பிறந்தநாளை இன்று குடும்பத்தினருடன் குடியாத்ததில் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது 90ஆவது வயதில் கலைமாமணி விருதுக்கு தான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், தனது 60 ஆண்டுகால கலை சேவைக்கு கிடைத்த ஆஸ்கர் விருது என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்