சினிமா பைனான்சியர் மீது நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்

சினிமா பைனான்சியர் சுப்பிரமணியம் அடியாட்களுடன் வந்து தன்னை தாக்கியதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டி உள்ளார்.
x
சினிமாத்துறையில் பலர் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது ரெட்டி டைரி எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு 11மணி அளவில் இப்படத்தின் பைனான்சியர் சுப்பிரமணி 2 அடியாட்களுடன்   தன் வீட்டிற்கு வந்து சிசிடிவி மின் இணைப்பை துண்டித்து, தன்னையும், தன்னுடைய உதவியாளரையும் தாக்கியதாக  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னுடைய மேலாளர் தலையில் பாட்டிலால் தாக்கிய அவர்கள், தன்னுடைய ஆடையையும் கிழித்து தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தொலைபேசி வழியாக புகார் அளித்துள்ளதாக கூறிய அவர், பைனான்சியர்  சுப்பிரமணியம், தமிழகம் மற்றும் ஹைதராபத்தில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். ஏற்கனவே பைனான்சியர் சுப்பிரமணியத்தால் உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி தெலுங்கானா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக கூறிய அவர், தன்னுடைய  காரை சுப்பிரமணியம் அபகரிக்க முயல்வதாக குற்றம் சாட்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்