நடிகர் பாபிசிம்ஹாவுக்கு டூப் போட்டு நடித்த விவகாரம் -'அக்னி தேவி' படத்திற்கு நீதிமன்றம் தடை

கோவை மாவட்ட முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றம், இயக்குநர் ஜான் பால்ராஜின், அக்னிதேவி படத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நடிகர் பாபிசிம்ஹாவுக்கு டூப் போட்டு நடித்த விவகாரம் -அக்னி தேவி படத்திற்கு நீதிமன்றம் தடை
x
கோவை மாவட்ட முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றம், இயக்குநர் ஜான் பால்ராஜின், அக்னிதேவி படத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த படத்திற்கு தடை கோரி, பாபிசிம்ஹா தாக்கல் செய்த மனுவில், தமக்கு பதிலாக, டூப் போட்டு நடித்ததால், அக்னி தேவி படத்தை வெளியிட கூடாது என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த, நீதிமன்றம்,  படத்தினை வெளியிடுவதில் உள்ள உண்மை தன்மையை கண்டறிய நீதிமன்ற ஆணையாளராக வழக்கறிஞர் கார்த்திகாவை நியமித்துள்ளது. மேலும், நீதிமன்ற ஆணையாளர் அறிக்கையை சமர்ப்பித்து மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, அக்னிதேவி படத்தினை வெளியிடுவதில் முன்பிருந்த நிலையே தொடரும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்