கல்லூரி மாணவிகள் 9 பேருக்கு இளையராஜா பாட வாய்ப்பு

சென்னை மகளிர் கல்லூரிகளில் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்ற இளையராஜா, மாணவிகளின் கேள்விகளுக்கு உற்சாகமாக பதில் அளித்திருந்தார்.
கல்லூரி மாணவிகள் 9 பேருக்கு இளையராஜா பாட வாய்ப்பு
x
சென்னை மகளிர் கல்லூரிகளில் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்ற இளையராஜா, மாணவிகளின் கேள்விகளுக்கு உற்சாகமாக பதில் அளித்திருந்தார். அப்போது அவரிடம் பேசிய மாணவிகள் சிலர் தங்களுக்கு பாடல் பாட விருப்பம் இருப்பதாக தெரிவித்திருந்தனர். அவ்வாறு கூறியவர்கள் சிலரை வரவழைத்து குரல் சோதனை செய்த இளையராஜா, பாடும் திறன் கொண்ட 9 பேரை தேர்வு செய்தார். அவர்களை அடுத்தடுத்த படங்களில் பாடகியாக அறிமுகப்படுத்த உள்ளதாக வெளியான தகவலால் மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்