அனுமதியின்றி பேனர், கட் அவுட்களை வைக்க ரஜினி, அஜித் ரசிகர்களுக்கு போலீசார் தடை...

சென்னை அருகே அனுமதியின்றி நடிகர் ரஜினி மற்றும் அஜித்தின் பேனர் மற்றும் கட் அவுட்களை வைக்க போலீசார் தடை விதித்தனர்.
அனுமதியின்றி பேனர், கட் அவுட்களை வைக்க ரஜினி, அஜித் ரசிகர்களுக்கு போலீசார் தடை...
x
சென்னையை அடுத்த பரங்கிமலையில் உள்ள ஒரு திரையரங்கில்  ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப் படமும்,  அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் நாளை வெளியாகிறது. இதையொட்டி திரையரங்கு முன்பு நடிகர் ரஜினி மற்றும் அஜித்துக்கு கட்அவுட் மற்றும் பேனர்களை ரசிகர்கள் வைத்துள்ளனர். அஜித்திற்கு 50 அடி உயரத்தில் கட் அவுட் வைக்கப்பட்டு உள்ளது. ரஜினிக்கு 75 அடி உயரத்தில்  கட் அவுட் வைக்கும் பணியில் ரசிகர்கள் ஈடுப்பட்டிருந்தனர். அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி கட் அவுட் மற்றும் பேனர்கள்  வைக்க கூடாது என்று கூறி ரசிகர்களுக்கு அதிரடி கட்டுப்பாடு விதித்ததாக கூறப்படுகிறது. அனுமதியின்றி வைக்கப்பட்ட நடிகர் ரஜினி மற்றும் அஜித்தின் கட்அவுட் மற்றும் பேனர்களை  அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு  பரங்கிமலை கண்டோன்மெண்ட் போர்டு நிர்வாக அதிகாரிகளிடம் போலீசார் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்