நடிகர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு - கேரள சுகாதாரத்துறை நடவடிக்கை

புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதாக நடிகர் விஜய் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு - கேரள சுகாதாரத்துறை நடவடிக்கை
x
சமீபத்தில் வெளியான சர்கார் படத்தில் வரும் சில காட்சிகளில் விஜய் சிகரெட் பிடிப்பதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தநிலையில், கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள திரையரங்கம் ஒன்றில், விஜய் புகைப்பிடிக்கும் படத்தைக் கொண்டு பேனர் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள சுகாதாரத் துறை, நடிகர் விஜய், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கேரள விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்