"சொந்தப் படத்தால் பலருக்கும் வாய்ப்பு" : நடிகர் சிவ கார்த்திகேயன் நெகிழ்ச்சி

'கனா' படத்தை தயாரித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், அது குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சொந்தப் படத்தால் பலருக்கும் வாய்ப்பு : நடிகர் சிவ கார்த்திகேயன் நெகிழ்ச்சி
x
'கனா' படத்தை தயாரித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், அது குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 'சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், தமது நண்பரான அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தை தயாரிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், சாதிக்கும் கனவில் சுற்றிய போது, எல்லா நிலைகளிலும் தம்முடன் இருந்த, நண்பர்களின் கனவையும் புரிந்து கொள்வது தமது கடமை என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது என்று, தமது சமூக வலை தள பக்கத்தில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்