நடிகர் சிவகுமாருடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் : செல்போனை கோபமாக தட்டிவிட்ட சிவகுமார்

செல்ஃபி எடுக்க முற்பட்ட ரசிகர் ஒருவரின் செல்போனை, நடிகர் சிவகுமார் கோபமாக தட்டிவிடும் காட்சிகள், இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் சிவகுமாருடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் : செல்போனை கோபமாக தட்டிவிட்ட சிவகுமார்
x
* மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவக்குமார் அங்கு நின்றிருந்தவர் செல்பி எடுக்க முயன்றதால், கோபமடைந்து செல்போனை 
தட்டிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

* பெரியார் பேருந்து நிலையத்தில் கருத்தரிப்பு மையம் திறப்பு விழாவில் பங்கேற்ற சிவக்குமாருடன்,அங்கு நின்றிருந்தவர் செல்பி எடுக்க முயன்றார். ஆனால் அந்த இளைஞனின் கையில் இருந்த செல்போனை சிவக்குமார்  தட்டி  விட்டார்.

செல்பி எடுத்த இளைஞரின் கைப்பேசியை  தட்டி விட்டது ஏன்?

* செல்போனை தட்டி விட்டது குறித்து நடிகர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். செல்பி எடுப்பது அவரவர் சொந்த விஷயம் என்று குறிப்பிட்டுள்ள நடிகர் சிவக்குமார், குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் இடங்களில் எப்படி வேண்டுமானாலும் செல்ஃபி எடுத்து கொள்ளுங்கள் என்று தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

* ஆனால் பொது இடங்களில் நடைபெறும் விழாவில்  பங்கேற்க செல்லும் போது பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை ஓரம் தள்ளிவிட்டு  செல்பி எடுக்கிறேன் என்று பலர், நடக்க விட  முடியாமல் செய்வது,  நியாயமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்