விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' என்னுடைய குறும்படம் : உதவி இயக்குனர் ஒருவர் போலீசில் புகார்

தனது குறும்படத்தின் கதைக்கருவை திருடி, கத்தி என்ற பெயரில், இயக்குனர் முருகதாஸ் படம் எடுத்துள்ளதாக, உதவி இயக்குனர் ஒருவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான கத்தி என்னுடைய குறும்படம் : உதவி இயக்குனர் ஒருவர் போலீசில் புகார்
x
* சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 2013-ஆம் ஆண்டில், உதவி இயக்குனர்கள் தேவை என முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாகவும், அதனால் அவரிடம் சேர்வதற்காக, விவசாயிகள் குறித்து தான் எடுத்திருந்த தாகபூமி என்ற குறும்படத்தை அனுப்பியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

* பின்னர், 2014-ம் ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தில், தனது 'தாகபூமி' குறும்படத்தின் மைய கருத்து மற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், ராஜசேகர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

* அதிர்ச்சியடைந்து, வழக்கறிஞர் வாயிலாக, முருகதாஸ், விஜய் மற்றும், 'கத்தி' படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் ஆனால் அதற்கு உரிய பதில் இல்லை என்றும், தெரிவித்துள்ள ராஜசேகர், கத்தி படம் தன்னுடைய கதை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தற்போது வெளியாகவுள்ள சர்கார் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் ராஜசேகர் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்