திரைப்பட நடிகைக்கு பாலியல் தொந்தரவு - நடிகர் சண்முகராஜன் மீது காவல் நிலையத்தில் புகார்
நடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
* நாட்டாமை, வில்லுப்பாட்டுக்காரன், ஜெமினி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ராணி. தமிழ் சீரியல் ஒன்றில் அவருக்கு கணவராக நடிகர் சண்முகராஜன் நடித்து வருகிறார்.
* நடிகர் சண்முகராஜன், ஏற்கனவே விருமாண்டி, அந்நியன், எம் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர் பகுதியில் டிவி சீரியலுக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
* இந்த நிலையில் படப்பிடிப்புக்கு வந்த ராணியின் கணவர் பிரசாந்தை சண்முகராஜன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ராணிக்கும் சண்முகராஜனுக்கும் இடையே பிரச்சினை அதிகரித்துள்ளது.
* இந்த நிலையில், நடிகை ராணி, செங்குன்றம் காவல் நிலையத்தில் சண்முகராஜன் மீது புகார் அளித்தார். சண்முகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அது தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் எனவும் ராணி குறிப்பிட்டுள்ளார். புகார்
* குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story