'எந்திரன்' பட விவகாரம் தொடர்பான வழக்கு : இயக்குநர் ஷங்கருக்கு அபராதம்
'எந்திரன்' திரைப்படம் தொடர்பான வழக்கில் ஆஜராகாத இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான 'எந்திரன்' படத்தின் கதை, தன்னுடையது என கூறி, ஆரூர் தமிழ்நாடன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இயக்குநர் ஷங்கர், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது, கூடுதல் அவகாசம் கேட்டு ஷங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று, நீதிபதி சுந்தர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஷங்கர் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதால் விசாரணையை தள்ளி வைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, கால அவகாசம் கோரிய இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அந்த தொகையை புளூ கிராஸ் அமைப்புக்கு வழங்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 12ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Next Story