நடிகர் பவர் ஸ்டார் மீது மோசடி வழக்குபதிவு

சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் பவர் ஸ்டார் மீது மோசடி வழக்குபதிவு
x
சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுவண்ணாரப்பேட்டை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த தயாநிதி என்பவரிடம், சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி, அவர் 4 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தயாநிதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், பவர் ஸ்டார் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டனர். இதனையடுத்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்