துக்க வீட்டில் செல்ஃபி எடுத்த நடிகர்

கலவரத்தின் போது கொல்லப்பட்ட மாணவர் இல்லத்திற்கு ஆறுதல் கூற சென்ற, நடிகர் சுரேஷ் கோபி, செல்ஃபி எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
துக்க வீட்டில் செல்ஃபி எடுத்த நடிகர்
x
கலவரத்தின் போது கொல்லப்பட்ட மாணவர் இல்லத்திற்கு ஆறுதல் கூற சென்ற, நடிகர் சுரேஷ் கோபி, செல்ஃபி எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த அபிமன்யூ என்ற கல்லூரி மாணவர், இரு பிரிவினரிடையே நடந்த மோதலில் கொலை செய்யப்பட்டார். மாணவர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காக நடிகரும், எம்.பி.யுமான, சுரேஷ் கோபி, வந்தார். பின்னர், அங்கிருந்த கிராமத்தினருடன் சிரித்த முகத்துடன், செல்பி எடுத்து மகிழ்ந்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்