காவிரி பிரச்சினைக்காக காலா படத்தை நிறுத்துவதா..? என நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.

காவிரிக்கும், காலாவுக்கும் என்ன சம்பந்தம் - நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி
காவிரி பிரச்சினைக்காக காலா படத்தை நிறுத்துவதா..? என நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.
x
காவிரி விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில மக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் இருமாநில அரசுகளும், மத்திய அரசு மற்றும் வல்லுநர் குழுவோடு இணைந்து, விவசாயிகளின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள வேண்டும் என பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

காலா படத்தை வெளியாகாமல் தடுத்து என்ன செய்யப் போகிறோம் என கேள்வி எழுப்பி அவர், ரஜினி கூறிய கருத்து பாதித்தது உண்மை தான் என்று குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு இது வேண்டும், இது வேண்டாம் என முடிவு செய்ய இவர்கள் யார் என கேள்வி எழுப்பியுள்ள அவர், படம் வெளியாகி, அதை பார்க்காமல் மக்கள் புறக்கணித்தால், அப்போது மக்களின் மனநிலையை தெரிந்து கொள்ளலாம் என பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்