Chengalpattu | ஒத்துழைக்க மறுத்த சிறுவனுக்கு நேர்ந்த கதி | சிறுவர் சீர்திருத்த பள்ளியில் பரபரப்பு
ஒத்துழைக்க மறுத்த சிறுவனுக்கு நேர்ந்த கதி | சிறுவர் சீர்திருத்த பள்ளியில் பரபரப்பு
செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் (அரசினர் பாதுகாப்பு இல்லம்) சிறுவர்கள் மோதிக்கொண்டாதால் பரபரப்பு ஏற்பட்டது. இங்குள்ள சிறுவர்களின் அறையில் இருந்து அதிகாரிகள் கஞ்சா கைப்பற்றியதாகவும் அதனை திரும்ப கேட்டு சிறுவர்கள் இருவர் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தாக கூறப்படுகிறது.மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு ஒத்துழைக்க மறுத்த தஞ்சாவூரை சேர்ந்த சிறுவனை இருவரும் தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. போலீசார் சிறுவனை மீட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
