TN Election 2026| கிடைத்த கிரீன் சிக்னல்.. தமிழக தேர்தல் களத்தில் உறுதியானது
தமிழகத்தில் வேட்புமனு பரிசீலனை நிறைவு தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்துள்ளது. மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 7,600 மனுக்களில், 4,902 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 2,347 மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன. 11 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளான. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற நாளை கடைசி நாளாகும். கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதேபோல், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூரில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், காரைக்குடியில் சீமான், தர்மபுரியில் சவுமியா அன்புமணி, மற்றும் விருத்தாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரது மனுக்களும் ஏற்கப்பட்டன. மேலும், அவிநாசி தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், சாத்தூரில் நயினார் நாகேந்திரன், ஸ்ரீபெரும்புதூரில் செல்வபெருந்தகை ஆகியோரது மனுக்களும் தகுதி பெற்றுள்ளன.
