Selvaperunthagai | செல்வப் பெருந்தகை மீது IT புகார்
செல்வப்பெருந்தகை மீது வருமான வரித்துறை புகார் பொய்யான தகவல்கள் பரப்பி அரசுக்கு அவதூறு ஏற்படுத்தியதாக, செல்வப்பெருந்தகை மீது சென்னை காவல் ஆணையரிடம் வருமான வரித்துறை புகார் அளித்துள்ளது. செல்வப்பெருந்தகை சமூக வலைதளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், சமீப காலத்தில் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை என்றும் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அவரது இல்லம் உள்ளிட்ட எந்த இடங்களிலும் சோதனை நடைபெறவில்லை என்றும், அவரது நகர்வுக்கு எந்தவிதத் தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தவறான தகவல் பரப்பிய விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.
