Rajan Chellappa | ``என்னிடம் 5 வருடத்தை கொடுங்கள்..'' - மக்களிடம் கேட்ட ராஜன் செல்லப்பா

``என்னிடம் 5 வருடத்தை கொடுங்கள்..'' - மக்களிடம் கேட்ட ராஜன் செல்லப்பா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கியதாக, அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா குற்றம் சாட்டியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டி, ஒந்திமலை, பல்கலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். செல்லும் இடமெல்லாம் அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் அவருக்கு மலர்கள் தூவியும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்களிடையே பேசிய ராஜன் செல்லப்பா, திமுக ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com