EPS vs A Raja | தமிழக அரசியல் களத்தில் பூதாகரமாக வெடித்த ஆடியோ விவகாரம்
ஆடியோ விவகாரத்தில் ஈபிஎஸ்-க்கு ஆ.ராசா கடும் கண்டனம் தமது ஆடியோ என்ற பெயரில் பரப்பப்படும் விவகாரம் தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தனது சமூக வலைதள பதிவில், தனது பேச்சாக பரப்பப்படும் ஆடியோ செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலியானது எனவும், இதுகுறித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் உண்மைத்தன்மை சந்தேகத்திற்குரிய நிலையில் இருக்கும் போது, அதனை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அநாகரிகம் என, மகாகவி பாரதியின் ‘பாஞ்சாலி சபதம் வரிகளை குறிப்பிட்டு சாடியுள்ளார்.
