BJP | பாஜகவின் அதிமுக்கிய தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்

பாஜகவின் அதிமுக்கிய தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்

பாஜகவின் அதிமுக்கிய தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் கிரண் ரிஜிஜு தலைமையிலான பாஜக குழு, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீது புகார் ஒன்றை அளித்தது. அதில் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் மோடி குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த கார்கே, பிரதமர் எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார், பயமுறுத்துகிறார் என்ற பொருளிலேயே தாம் பேசியதாகவும், அவரை நேரடியாக பயங்கரவாதி என கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com