AMMK | சீவப்பேரியை கலக்கிய நாங்குநேரி அமமுக வேட்பாளர்
சீவப்பேரியை கலக்கிய நாங்குநேரி அமமுக வேட்பாளர்
தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவேன் என நாங்குநேரி அமமுக வேட்பாளர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியை தொழில், கல்வி, விவசாயத்தில் தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவேன் என, அ.ம.மு.க. வேட்பாளர் இசக்கிமுத்து சீவலப்பேரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்தார். கூட்டணி கட்சி ஆதரவாளர்களுடன் துர்க்கை அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், மேளதாளங்களுடன் பிரச்சார வாகனத்தில் வாக்கு சேகரிக்க புறப்பட்டார். மெயின் பஜாரில் பொதுமக்களை சந்தித்த இசக்கிமுத்து , பாளையங்கால்வாயில் நீர் வசதி, சீவலப்பேரி சந்தை உள்ளிட்டவை மேம்படுத்தப்படும் என்றும், நாங்குநேரி சிப்காட் வளாகத்தை செயல்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதுடன், மாணவர்களுக்காக தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்றும் இசக்கிமுத்து வாக்குறுதி அளித்தார்.
