AIADMK |``பட்டாசு, தீப்பெட்டி தொழில்களை பாதுகாப்பதே லட்சியம்'' - ராஜேந்திர பாலாஜி தீவிர பிரச்சாரம்
``பட்டாசு, தீப்பெட்டி தொழில்களை பாதுகாப்பதே லட்சியம்'' - ராஜேந்திர பாலாஜி தீவிர பிரச்சாரம்
பட்டாசு, தீப்பெட்டி தொழில்களை பாதுகாப்பதே லட்சியம் - ராஜேந்திர பாலாஜி தீவிர பிரச்சாரம் சிவகாசி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி, தனது பிரசார வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகத்தில் போதைக் கலாசாரம் தலைவிரித்தாடுவதாகவும், சட்டம்-ஒழுங்கைச் சீரமைக்க எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், விருதுநகர் மாவட்டத்தின் பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சுத் தொழில்களைப் பாதுகாப்பதே தனது வாழ்நாள் லட்சியம் எனக் குறிப்பிட்ட ராஜேந்திர பாலாஜி, 210 தொகுதிகளில் வென்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனத் தன்னம்பிக்கை தெரிவித்தார்.
