AIADMK Campaign | வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளருக்கு ஆசி வழங்கிய பழங்குடியின மக்கள்
AIADMK Campaign | வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளருக்கு ஆசி வழங்கிய பழங்குடியின மக்கள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலனுக்கு பழங்குடியினப் பெண்கள், ஆசி வழங்கியது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. காட்டுநாயக்கர், பணியர் உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களுக்கு அடிப்படைத் தேவைகளான குடிநீர் மற்றும் சாலை வசதிகளை முன்னின்று செய்து கொடுத்தவர் பொன்.ஜெயசீலன். குறிப்பாக, பழங்குடியின மக்களைச் சென்னைக்கு அழைத்து வந்து, தமிழக சட்டமன்றத்தின் விருந்தினர் இருக்கையில் அமர வைத்து, அவர்களின் முன்னேற்றம் குறித்துச் சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரை, அன்று தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது மீண்டும் வாக்குச் சேகரிக்கப் புத்தூர்வயல் பகுதிக்கு பொன்.ஜெயசீலன் சென்றபோது, தன்னை வருகிற தேர்தலில் வெற்றிபெறச் செய்யுங்கள் என இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
