AIADMK | குமரியில் பிரசாரம் செய்த அதிமுக வேட்பாளர் - மலர் கிரீடம் வைத்து ஆரத்தி எடுத்த பெண்கள்
குமரியில் பிரசாரம் செய்த அதிமுக வேட்பாளர் - மலர் கிரீடம் வைத்து ஆரத்தி எடுத்த பெண்கள்
குமரியில் பிரசாரம் செய்த அதிமுக வேட்பாளர் - மலர் கிரீடம் வைத்து ஆரத்தி எடுத்த பெண்கள்
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம், அகஸ்தீஸ்வரம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக அகஸ்தீஸ்வரம் பிள்ளையார் கோயிலில் வழிபாடு செய்த அவருக்கு, பொதுமக்கள் மலர் கிரீடம் அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். திறந்த வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட அவர், திமுக ஆட்சியில் பெருகி வரும் போதை கலாச்சாரத்தை ஒழிக்கவும், பெண்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் மற்றும் விலையில்லா சிலிண்டர் உள்ளிட்ட அதிமுகவின் வாக்குறுதிகள் நிறைவேறவும், பொதுமக்கள் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
