#Breaking || இறுதி எச்சரிக்கை விடுத்த வங்கக்கடல்.. இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்- மீனவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
x

கடலூர் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது. கடலில் நிலவும் சீற்றம் மற்றும் கடல் காற்று 55 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலில் தங்கி மீன் பிடித்துகொண்டிருக்கும் மீனவர்களும் ஆங்காங்கே இருக்கும் துறைமுகங்களில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்தி வைக்க மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. மீன்வளத்துறை எச்சரிக்கை தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்