சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் இன்று பதவியேற்பு

x

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்க உள்ளனர்.வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி ஆகிய 5 பேரை சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.இதையடுத்து ஐந்து கூடுதல் நீதிபதிகளும் இன்று காலை10:35 மணிக்கு பதவியேற்கின்றனர். அவர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.ஐந்து புதிய நீதிபதிகளுடன் சேர்த்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயருகிறது. இன்னும் 18 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்