பள்ளிக்குள் முன்னாள் மாணவி துப்பாக்கிச் சூடு.. 3 குழந்தைகளுடன் 7 பேர் துடிதுடித்து பலி - அடுத்தடுத்து தாக்க திட்டம் - அமெரிக்காவில் பகீர் சம்பவம்

x
  • அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்து முன்னாள் மாணவி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
  • டென்னீசி மாகானம் நாஷ்வில்லில் தேவாலயத்துடன் கூடிய கிறிஸ்தவ தொடக்கப் பள்ளிக்குள் புகுந்த பெண் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதால், மாணவர்கள், ஆசிரியர்கள் தலைதெறிக்க ஓடினர்.
  • இந்த தாக்குதலில், 3 குழந்தைகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
  • தகவலறிந்து சென்ற காவல்துறையினர், துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்ணை சுட்டுக் கொன்றனர்.
  • விசாரணையில், அந்த பெண், அந்த பள்ளியின் முன்னாள் மாணவியான 28 வயது எலிசபெத் ஹாலே என்பது தெரிய வந்த‌து.
  • அவர் மேலும் பல பள்ளிகளில் தாக்குதல் நடத்துவதற்காக, பள்ளிக் கூடங்களில் வரைப்படங்களை வரைந்து வைத்திருந்த‌தாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
  • அவர் ஒரு திருநங்கையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்